என் மலர்
நீங்கள் தேடியது "கண் அறுவை சிகிச்சை அரங்கு"
- ரூ.82 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை அரங்கம் புதிய கட்டிடத்தில் மாற்றப்பட்டுள்ளது.
அதற்கான அலுமினிய தடுப்பறைகள் அமைக்கும் பணிக்கான செலவுகளை குடியாத்தம் கேஎம்ஜி கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜே.கே.என்.பழனி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி, ரோட்டரி உறுப்பினர் டி.பிரபாகரன் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அலுமினிய தடுப்பறை பணிகளை கே.எம்.ஜி.ராஜேந்திரன், ஜே.கே.என். பழனி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி ஆகியோர் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எம்.கண்ணகி, குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் எம்.மாறன்பாபு, ஆர்.ஹேமலதா, செவிலியர் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வி.என்.அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர்.






