என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "19 வீடுகள் சேதம்"

    • மழையால் ஊட்டியில் 3 இடங்களிலும், குந்தாவில் 1 இடத்திலும், குன்னூரில் 1 இடத்திலும் மரங்கள் விழுந்துள்ளன.
    • மாவட்டத்தில் 13 இடங்களில் சுற்றுச்சுவா்களில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மசினகுடி பகுதியில் ஒரு ஆடு இறந்துள்ளது.

    இதற்கு அரசின் நிவாரணத் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது. மழையால் ஊட்டியில் 4 வீடுகள், குன்னூரில் 14 வீடுகள், கோத்தகிரியில் 1 வீடு என மொத்தம் 19 வீடுகள் பகுதியாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தி னருக்கு தலா ரூ. 4,100 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

    மழையால் ஊட்டியில் 3 இடங்களிலும், குந்தாவில் 1 இடத்திலும், குன்னூரில் 1 இடத்திலும் மரங்கள் விழுந்துள்ளன.

    தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் உடனடியாக இந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

    மழையின் காரணமாக மாவட்டத்தில் 13 இடங்களில் சுற்றுச்சுவா்களில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

    மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலையில், இந்திரா நகா் பகுதியில் மழையின் காரணமாக பகுதி வீடு சேதமடைந்த 3 குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரணத் தொகையாக தலா ரூ.4,100-ஐ வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் வழங்கினாா். இதே போல மாவட்டத்தில் மழைகாரணமாக வீடு சேதமடைந்த நபா்களுக்கு நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா். மாவட்ட நிா்வாகத்தின் மூலம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடி க்கை எடுக்கப்பட்டு, மழை நீா் செல்லக் கூடிய தாழ்வான பகுதிகளில் அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சா் தெரிவித்தாா்.

    இந்த நிகழ்ச்சிக்குப் பின் குன்னூா் வட்டத்துக்கு உள்பட்ட தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்திலும், அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வாக்காளா் பட்டியலி ல் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தங்கள் ஆகிய பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பாா்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

    ஆய்வி ன்போது, குன்னூ ா் கோட்டாட்சியா் பூஷணகு மாா், குன்னூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ண மூா்த்தி, குன்னூா் வட்டா ட்சியா் சிவகுமாா், குன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோகன குமார மங்கலம்,ஜெய்சங்கா், நகர திமுக செயலளர் ராமசாமி, நகர துணை செயலாளர் வினோத் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    ×