என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ உதவியாளர் பணி"

    • மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்.
    • டிரைவர் பணியிடத்துக்கு, 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 108 அவசரகால ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது.

    மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி (பிளஸ்-2-க்கு பின் 2 ஆண்டுகள் படிப்பு) அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்.சி ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி) படித்தவர்கள் பங்கேற்கலாம்.

    மாத ஊதியம் ரூ.14,966 வழங்கப்படும். டிரைவர் பணியிடத்துக்கு, 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இரு பாலருக்கும் வாய்ப்பு உண்டு. ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும், பேட்ஜ் உரிமம் எடுத்து 2 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். 162.5 சென்டிமீட்டர்., உயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு ரூ.14, 766 ஊதியம் வழங்கப்படும். அசல் சான்றிதழ் உடன் முக கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும்.

    ×