என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்னல் கம்பம் சாய்ந்தது"

    • போக்குவரத்து பாதிப்பு
    • சாலை நடுவில் தடுப்பு அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    ஆற்காட்டில் இருந்து இன்று காலை தனியார் டவுன் பஸ் வேலூர் பழைய பஸ் நிலையம் நோக்கி வந்தது. ஆற்காடு ரோட்டில் சிஎம்சி ஆஸ்பத்திரி முன்பு சென்றபோது பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    பஸ் கம்பத்தில் மோதி விபத்து

    காமராஜர் சிலை அருகே உள்ள சிக்னல் கம்பத்தில் பஸ் பயங்கரமாக மோதியது. இதில் சிக்னல் கம்பம் ரோட்டில் சாய்ந்து விழுந்தது. அதனுடன் இணைக்க பட்டிருந்த கேபிள் மற்றும் மின் ஒயர்களும் ரோட்டில் அறுந்து விழுந்தன.

    இதனால் ஆற்காடு ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாலையில் விபத்து நடந்ததால் வாகனங்கள் காட்பாடி ரோட்டில் திருப்பி விடப்பட்டன.

    போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் மின் கம்பம் மற்றும் ரோட்டில் இருந்து ஒயர்கள் அகற்றப்பட்டன.

    எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் சி.எம்.சி. சிக்னலில் விபத்து நடந்த நேரத்தில் வாகனங்கள் வரத்தும் மக்கள் நடமாட்டமும் குறைவாக இருந்தது. அதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை மற்ற நேரங்களில் விபத்து ஏற்பட்டிருந்தால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கும்.

    தனியார் ஆஸ்பத்திரி முன்பு ஆற்காடு சாலையில் போலீசார் வாகனங்கள் சீராக செல்லும் வகையில் இரும்பு தடுப்புகளை அமைத்திருந்தினர். இதனால் வாகனங்கள் வரிசையாக சென்றன.

    தற்போது சாலை நடுவில் இருந்த இரும்பு தடுப்புகளை போலீசார் அகற்றிவிட்டனர். இதனால் ஆற்காடு சாலையில் ஆஸ்பத்திரி முன்பு பல வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாகவும் தாறுமாறமாகவும் செல்கிறது.

    இது விபத்துகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

    ஆற்காடு சாலையில் மேலும் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க உடனடியாக சாலை நடுவில் தடுப்புகளை அமைத்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×