என் மலர்
நீங்கள் தேடியது "காதலனுடன் நர்ஸ் போலீசில் தஞ்சம்"
- வீட்டைவிட்டு வெளியேறிய காதல்ஜோடி பழனியில் திருமணம் செய்து கொண்டு சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.
- இதில் மணமகனின் சகோதரர் அவர்களை ஏற்றுக்கொண்டதால் அவருடன் காதல்ஜோடி அனுப்பி வைக்கப்பட்டனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியை சேர்ந்தவர் கார்த்திக்குமார்(22). இவர் தனது சகோதரர் பராமரிப்பில் இருந்து வருகிறார். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பேக்கரியில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும், எரியோடு அருகே உள்ள நல்லமனார்கோட்டையை சேர்ந்த தாரணிதேவி(19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
தாரணிதேவி தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்த விபரம் அவரது பெற்றோருக்கு தெரியவரவே எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வீட்டைவிட்டு வெளியேறிய காதல்ஜோடி பழனியில் திருமணம் செய்து கொண்டு சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலையில் மகள் மாயமானதாக எரியோடு போலீசில் அவரது தந்தை புகார் அளித்திருந்தார். எனவே காதல்ஜோடி அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எரியோடு சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மணமகனின் சகோதரர் அவர்களை ஏற்றுக்கொண்டதால் அவருடன் அனுப்பி வைத்தார்.






