என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.7 லட்சம் நகைகள் கொள்ளை"

    • குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.
    • திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகேயுள்ள கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 38).இவர் வாட்ச் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.திரும்ப வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.அதிர்ச்சியடைந்த ராஜா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது.

    திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசில் ராஜா புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.

    ×