என் மலர்
நீங்கள் தேடியது "மாணவிக்கு பாராட்டு விழா"
- மருத்துவக்கல்லூரிக்கு தேர்வாகி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
- பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி, நினைவு பரிசு மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகியில் சேலம் மெயின் ரோட்டில் உள்ள பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த இந்திரா என்ற மாணவி பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தஞ்சை ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு தேர்வாகி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சாதனை படைத்த மாணவிக்கு பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி, நினைவு பரிசு மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.
அவர் பேசும் போது கால்நடை மருத்துவ படிப்பில் நன்றாக படித்து மாணவியின் விருப்பத்திற்கு ஏற்றவாறு எதிர்காலத்தில் மாவட்ட கலெக்டர் ஆகி பெற்றோருக்கும் படித்த பள்ளிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என கூறினார்.
மேலும் மாணவி கால்நடை மருத்துவ படிப்பில் இடம் பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், ஆசிரியைகளை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் பாரத் கல்வி குழுமங்களின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி, பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நஷீர்பாஷா ஆகியோர் பாராட்டினார்கள்.






