என் மலர்
நீங்கள் தேடியது "மீட்பு படையினர் வருகை"
- நீலகிரியில், 283 இடங்கள் பேரிடர் அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
- தீயணைப்பு துறை சார்பில் மாவட்டம் முழுவதும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது
ஊட்டி,
நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரு வாரம் தங்கி பேரிடர் பகுதிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீலகிரியில், 283 இடங்கள் பேரிடர் அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில், 44 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 483 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன.
மேலும், அரக்கோணத்தில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் ஹரிதேவ் பண்டார், அருண்ரத்தோர் ஆகியோர் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஊட்டி வந்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனப்பிரியாவை சந்தித்தனர்.
இப்படையினர் இரு வாரம் தங்கி ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் தாலுகா பகுதிகளில் பொதுமக்களிடையே சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். பேரிடர் பகுதிகளை பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளனர்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் கூறுகையில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறை சார்பில் மாவட்டம் முழுவதும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பருவ மழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விழிப்புணர்வு ஏற்ப டுத்துகின்றனர் என்றார்.






