என் மலர்
நீங்கள் தேடியது "தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு"
- பரிசுகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் அருகே பெண் தவறவிட்ட வைரக் கம்மலை தூய்மை பணியாளர்கள் மூலம் மீட்கப்பட்டது.
இதனை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்கள் விஜய், கோபால் ஆகியோருக்கு பாராட்டு விழா குடியாத்தம் நகர் மன்ற கூட்டத்தில் நடைபெற்றது.
நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் விஜய் மற்றும் கோபால் ஆகியோருக்கு புத்தாடைகள் வழங்கியும் பரிசுகளும் வழங்கியும் பாராட்டி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ், சுகாதார அலுவலர் மொய்தீன், களப்பணி மேற்பார்வையாளர் பிரபுதாஸ் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களை பாராட்டி நகர்மன்ற உறுப்பினர்கள் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






