என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்று திறனாளி கிரிக்கெட் போட்டி. DISABLED CRICKET TOURNAMENT"

    • மாற்று திறனாளிகள் கிரிக்கெட் போட்டி நவம்பர் 2 முதல் 6 ம் தேதிவரை மும்பையில் நடக்கவுள்ளது.
    • மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில தமிழக அணிக்காக விளையாட அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அரியலூர்

    மும்பையில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில தமிழக அணிக்காக விளையாட அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மாற்று திறனாளிகள் கிரிக்கெட் போட்டி நவம்பர் 2 முதல் 6 ம் தேதிவரை மும்பையில் நடக்கவுள்ளது. இதற்கான தமிழக அணியின் கேப்டனாக அரியலூர் மாவட்டம், திருமழபாடியைச் சேர்ந்த ராஜ் மகேஷ்வரன் என்பவர் தேர்வு செய்யபட்டுள்ளார்.

    இவருடன் அரியலூரை சேர்ந்த சன்மேக்கர் மற்றும் செல்வகணேஷ் என்ற மாற்று திறனாளி வீரர்களும் தேர்வு செய்யபட்டுள்ளனர்.

    ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாற்று திறனாளி வீரர்கள் தமிழக அணிக்காக மும்பையில் விளையாட உள்ளது அரியலூர் மாவட்டத்திற்கு பெருமையை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் சனிக்கிழமை அரியலூர் ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளது குறிப்பிடதக்கது.

    ×