என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடியில் இருந்து விழுந்து சாவு"

    • மதுபோதையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி ராமகிருஷ்ணாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வ குமார் (வயது 43), லாரி டிரைவர். இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும், கீர்த்தனா, கார்த்திகா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

    இவர் கடந்த 25-ந் தேதி மதுபோதையில் வீட்டின் மாடி பகுதியில் இருந்து இறங்கும்போது தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அஞ்சலி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×