என் மலர்
நீங்கள் தேடியது "கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை"
- 6 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
- 6 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, குல்லட்டி அடுத்த சாலிவரத்தை சேர்ந்தவர் திம்மப்பா (வயது 28). கூலித்தொழிலாளி. இவர், அதேபகுதியில் ஆடு மேய்க்கும் மனநலம் பாதித்த 27 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து அந்த பெண்ணுக்கோ, மற்றவர்களுக்கோ தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கு பிறகு உடல்நலம் பாதித்த அப்பெண்ணை பரிசோதித்தபோது போது அவர், 6 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
இது தொடர்பாக அப்பெண்ணின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அப்போது அங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சரவணன், விசாரணை நடத்தி கடந்த 24.05.2019 அன்று திம்மப்பாவை கைது செய்தார். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட திம்மராஜ் மனநலம் பாதித்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அப்பெண் கருவுற்றது நிரூபிக்கப்பட்டதால், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, 10 ஆண்டு சிறை மற்றும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றியதற்காக, 10 ஆண்டு சிறை, 5 ஆயிரம் அபராதம், மற்றும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக, 10 ஆண்டு சிறை மற்றும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுதா உத்தரவிட்டார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.






