என் மலர்
நீங்கள் தேடியது "5 கிலோ சிலிண்டர்"
- பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் மற்றும் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.
- விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரேசன் விலைக்கடைகளில் நகர்புறங்களில் வழங்கப்பட்ட 5 கிலோ சிலிண்டர்கள் கிராமபுறங்களிலிலும் வழங்கப்படும் என்றார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் மற்றும் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர் முரளி தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி., இந்து நாடார்கள் உறவின்முறை சங்க துணைத்தலைவர் பிரசன்னா, செயலர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலர் நிர்மல்ராஜீவ் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி பங்கேற்று என் எஸ்.வி.வி. அரசு உதவி பெறும் ஆண்கள் பள்ளி மற்றும் பெண்கள் பள்ளிகளில் படிக்கும் 393 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா ைசக்கிள்கள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
ரேசன் விலைக்கடைகளில் நகர்புறங்களில் வழங்கப்பட்ட 5 கிலோ சிலிண்டர்கள் கிராமபுறங்களிலிலும் வழங்கப்படும். நிலக்கோட்டை பகுதியில் விரைவில் முதல்-அமைச்சர் மு.கஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து கலைக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






