என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு"

    • எதிர்பாராத விதமாக அங்கிருந்த கிணறு ஒன்றில் தவறி விழுந்தார்.
    • முகேஷுக்கு நீச்சல் தெரியாது.எனவே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள மஞ்சமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (வயது 29).இவர் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று தான் வசித்து வரும் பகுதி வழியாக நடந்து சென்ற முகேஷ் எதிர்பாராத விதமாக அங்கிருந்த கிணறு ஒன்றில் தவறி விழுந்தார்.

    முகேஷுக்கு நீச்சல் தெரியாது.எனவே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.இது பற்றிய தகவல் அறிந்த கிராம மக்கள் போச்சம்பள்ளி தீயணைப்புத்துறைக்கு தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து முகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×