என் மலர்
நீங்கள் தேடியது "முதியவர் பிணமாக மீட்பு"
- ஓடையில் இறங்கி குளித்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ரெண்டாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி முன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் ரத்நன ரெட்டி (வயது 70). இவர் நேற்று முன்தினம் காலையில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பியபோது விவசாய நிலத்தின் அருகே செல்லும்போது ஓடை கால்வாயில் இறங்கி குளித்துள்ளார்.
அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ரத்தின ரெட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இது பற்றி சோளிங்க தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ரத்தன ரெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகியும் கண்டுபிடிக்க முடியாததால் அவரை தேடும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் அவரை தேடும் பணி நடந்தது.
நீண்ட நேர தேடலுக்கு பின்னர் ரத்தினரெட்டி பிணமாக மீட்கப்பட்டார்.அவரது உடலை மீட்டு சோளிங்கர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






