என் மலர்
நீங்கள் தேடியது "தீபாவளி சிரப்பு யாகம்"
- வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடந்தது
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
வாலாஜா:
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம், அபிஷேக பூஜைகள் வாலாஜா, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர சாமிகள் 5 அடி உயரத்தில் பத்மநிதி, சங்கநிதியுடன் ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலக மக்கள் அனைவரும் ஐஸ்வர்யம் பெற்று ஆரோக்யமுடன், ஆனந்தமாக வாழ ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பலவித வண்ண மலர்களால் விசேஷ அர்ச்சனை, தீப சேவை ஆகியவையும் நடைபெற்றது.
யாகம் மற்றும் அபிஷேகத்தில் பங்கேற்று வழிபட்ட பக்தர்களுக்கு பிரசாதமும், குபேர ரட்சை, டாலர், குங்குமம் ஆகியவை வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து இன்று அமாவாசை முன்னிட்டு ஸ்ரீ சரப சூலினி ப்ரத்யங்கிரா தேவி யாகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.






