என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்புக் காட்டுக்குச் சென்று வனத்துறையின் அதிரடி சோதனை"

    • வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை
    • நாட்டுத் துப்பாக்கி, கத்தி, 3 பைக் பறிமுதல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே உள்ள தச்சம்பட்டு காப்பு காட்டு பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக வனச்சரகர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தச்சம்பட்டு காப்புக் காட்டுக்குச் சென்று வனத்துறையின் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதில் 2 மான்களை வேட்டையாடிய ஆண்டியார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி (வயது 36), விக்னேஷ் (26), காட்டு ராஜா (29), விஜய் (23), ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து மான் இறைச்சி, மான் தோல் மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கி, பேட்டரி, கத்தி 3 பைக்குகள் உள்ளிட்ட வைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் ஒருவர் மான்கறியை துண்டுகளாக்கி விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், உதவி வனப் பாதுகாவலர் முரளிதரன் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா தலைமையில் வனவர் மாசிலாமணி உள்ளிட்ட வனத்துறையினர் பரதராமி சரஸ்வதி நகர் பகுதியில் ஒருவரது வீட்டில்திடீர் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் 3 பிளாஸ்டிக் பைகளில் மான் கறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மான் கறி வைத்திருந்ததாக செல்லமுத்து மகன் நேதாஜி (வயது 30) என்பவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் நேதாஜி மான் இறைச்சி விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி நேதாஜி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட நேதாஜிக்கு மான் இறைச்சி எங்கிருந்து கிடைத்தது அல்லது அவரே மானை வேட்டையாடினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்ற வருகிறது. திருவண்ணாமலை, அக்.25-

    திருவண்ணாமலை அருகே உள்ள தச்சம்பட்டு காப்பு காட்டு பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக வனச்சரகர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தச்சம்பட்டு காப்புக் காட்டுக்குச் சென்று வனத்துறையின் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதில் 2 மான்களை வேட்டையாடிய ஆண்டியார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி (வயது 36), விக்னேஷ் (26),காட்டு ராஜா (29), விஜய் (23), ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து மான் இறைச்சி, மான் தோல் மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கி, பேட்டரி, கத்தி 3 பைக்குகள் உள்ளிட்ட வைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குடியாத்தம்

    குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் ஒருவர் மான்கறியை துண்டுகளாக்கி விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், உதவி வனப் பாதுகாவலர் முரளிதரன் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா தலைமையில் வனவர் மாசிலாமணி உள்ளிட்ட வனத்துறையினர் பரதராமி சரஸ்வதி நகர் பகுதியில் ஒருவரது வீட்டில்திடீர் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் 3 பிளாஸ்டிக் பைகளில் மான் கறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மான் கறி வைத்திருந்ததாக செல்லமுத்து மகன் நேதாஜி (வயது 30) என்பவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் நேதாஜி மான் இறைச்சி விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி நேதாஜி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட நேதாஜிக்கு மான் இறைச்சி எங்கிருந்து கிடைத்தது அல்லது அவரே மானை வேட்டையாடினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்ற வருகிறது.

    ×