என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு"

    • உடலில் கடிபட்ட காயங்களுடன் கிடந்தார்.
    • சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாக்கடை அருகேயுள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 35). இவர் வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டி சென்றார்.

    நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால் வனப்பகுதிக்குள் தேடி சென்றுள்ளனர்.அப்போது அவர் உடலில் கடிபட்ட காயங்களுடன் கிடந்தார். உடனே அன்பழகனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி சுத்த தந்த புகாரின்பேரில் மகாரா ஜாக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பழகனின் உடலில் காயங்கள் ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ×