என் மலர்
நீங்கள் தேடியது "சந்தையில் குவிந்த வியாபாரிகள்"
- கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
- உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கேளுர் ஊராட்சிக்கு உட்பட்ட தேப்பனந்தல் மாட்டு சந்தை ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை நடக்கிறது.
அதுமட்டுமன்றி திருவண்ணாமலை மாவட்ட அளவில் இந்தப் பந்தல் மாட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா போன்ற மாநிலங்களிருந்தும் மாடுகள் கொண்டு வரப்படுகின்றன.
இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் வியாபாரிகள் குவிய தொடங்கினர்.
இந்நிலையில் அரசு ஒப்பந்தத்தில் நிர்ணயித்த கட்டணம் 50ரூபாய்க்கு பதிலாக 120ரூபாய் கூடுதல் கட்டணம் வரி வசூலித்துள்ளனர்.
மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்க பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இது மட்டுமின்றி கட்டணம் ரசீதும் வழங்க மறுப்ப தாகவும் விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மாட்டு சந்தையை சீராக நடத்த கோரி மாட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






