என் மலர்
நீங்கள் தேடியது "அடையாளம் தெரியாத முதியவர் பிணம்"
- அடையாளம் தெரியாத முதியவர் பிணம் கிடந்தது
- கட்டளை மேட்டு வாய்க்காலில்
புதுக்கோட்டை
திருச்சி கே.கே.நகரில் இருந்து உடையான்பட்டி வழியாக கட்டளை மேட்டு வாய்க்கால் விராலிமலை ஒன்றியம் மாத்தூர் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளின் நுழைந்து சூரியூர் வரை செல்கிறது. இந்த வாய்க்காலில் கே.கே.நகர் உடையான்பட்டி அருகே நேற்று முன்தினம் காலை 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்ததாகவும் அந்த உடலானது வாய்க்காலில் உள்ள முள்ளில் சிக்கி இருப்பதாக அப்பகுதியினர் மாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் நேற்று காலை வந்து வாய்க்காலில் தேங்கியிருந்த அடையாளம் தெரியாத முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாத்தூர் போலீசார் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் அந்த முதியவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் திருச்சி அண்ணா நகரில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்தனர்.






