என் மலர்
நீங்கள் தேடியது "போலீசாருக்கு அஞ்சலி"
- வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் காவலர் வீரவணக்கநாள் அனுசரிக்கப்பட்டது.
அமைச்சர் எ.வ. வேலு, எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், அமலு விஜயன், கலெக்டர் குமார வேல் பாண்டியன், வேலூர் மாநகர மேயர் சுஜாதா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மூன்று முறை 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து அனைவரும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி போலீசார் கருப்பு பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்
பொதுமக்கள் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் பணியின் போது உயிர்த்த காவலர்களுக்கான வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டது.
திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்கம் நாளில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
திருப்பத்தூர் வாணியம்பாடி, ஆம்பூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் இன்ஸ்பெக்டர்கள் மங்கையர்க்கரசி, ஜெயலட்சுமி, சாந்தி, ஹேமாவதி உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.






