என் மலர்
நீங்கள் தேடியது "சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம்"
- துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.
- கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்சில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேலுமலை பகுதியில் விபத்தினை தடுக்கும் பொருட்டு சிவப்பு ஒளிரும் விளக்குகள், உயர் மின் கோபுர விளக்கு, வாகனங்கள் மெதுவாக செல்ல ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தல் மற்றும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மேலும் கிருஷ்ணகிரி சுங்கசாவடி அருகே வாகனங்கள் அபாயகரமாக பிரதான சாலையை கடப்பதால் விபத்துகளை தடுக்கும் பொருட்டு தடுப்பு சுவரிலுள்ள இடைவெளியினை முழுவதுமாக அடைக்க வேண்டும். சேலம் மேம்பாலம் அருகே பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் எதிர் திசையில் செல்லுவதால் அங்கு ஒரு போக்குவரத்து காவலர் மற்றும் சி.சி.டி.வி. கேமரா அமைக்கவும், விதிகளை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
கே.ஆர்.பி அணை சந்திப்பு சாலை அருகே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்கும் வகையில் வாகனங்களை முற்றிலும் நிறுத்துவதை தவிர்ப்பது குறித்தும், சென்னை தேசிய நெடுஞ்சாலை குப்பம் பிரிவு சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வெள்ளை ஒளிரும் பட்டைகள் மற்றும் கேமரா பொருத்துவது என முடிவு செய்யப்பட்டது.
நகரின் முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பிரதான சாலை சந்திப்பு பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி, சாலை போக்குவரத்தினை கண்காணிப்பது. விதி மீறல்கள் இல்லாமல் சிறு சிறு விபத்துகளை தவிர்ப்பது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






