என் மலர்
நீங்கள் தேடியது "கை கழுவும் தினம்"
- வந்தவாசி அரசு பள்ளியில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் வந்தவாசி கிளை மற்றும் வழூர் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து உலக கை கழுவும் தினம் மற்றும் டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி வந்தவாசி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை பத்மாவதி தலைமை தாங்கினார்.
ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். வந்தவாசி ரெட் கிராஸ் சங்க துணைத் தலைவர் சரவணன், வட்டார சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார முதுநிலை மருத்துவர் காளிச்செல்வம் பங்கேற்று பேசினார்.
இந்த விழாவிற்கு ரெட் கிராஸ் உறுப்பினர்கள் சதானந்தன், வந்தை பிரேம், அ. ஷாகுல் அமீது, எம்.பி. வெங்கடேசன், மலர் சாதிக், மனோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சுகாதார ஆய்வாளர்கள் சுந்தர்ராஜன், சுமதி, நந்தகுமார், அன்புக்கரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இறுதியில் ரெட் கிராஸ் சங்க பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் கேசவராஜ் நன்றி கூறினார்.






