என் மலர்
நீங்கள் தேடியது "விவசாய நிலத்திற்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை"
- 5 பேர் மீது மனைவி புகார்
- சந்தேகத்தின்பேரில் போலீசார் நடவடிக்கை
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்த அடைக்கல் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 52).இவர் தென் கருப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காசாளராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விவசாய நிலத்திற்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை இதையடுத்து விவசாய நிலத்திற்கு சென்று பார்த்த போது கிணற்றுக்கு அருகில் அவரது செருப்பு மற்றும் செல்போன் கிடந்தது.
இதையடுத்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்த வீராசாமி உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை குறித்து அவரது மனைவி மீனாட்சி வாணபுரம் போலீசில் தனது கணவர் சாவில் 5 பேர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். போலீசார் சந்தேகத்தின்பேரில் வீராசாமியின் உறவினர்கள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






