என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரி கலெக்டர் எச்சரிக்கை"

    • கலெக்டரிடம் அனுமதி பெற எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது விதிகளின்படி குற்றமாகும்.
    • மின் இணைப்பை துண்டிக்க, மின் வாரியத்தின் மூலம் விதிகளின் படி மேல்நடவடிக்கை தொடரப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டகலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளில், சில தொழிற்சாலைகள் தற்போது வரை கனிம இருப்பு கிடங்கு அமைக்க, கலெக்டரிடம் அனுமதி பெற எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது விதிகளின்படி குற்றமாகும்.

    எனவே, தமிழ்நாடு கனிம இருப்பு கிடங்கு விதிகள், 2011-ன் விதி 4-ன்படி கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள், 15 நாட்களுக்குள் விண்ணப்பம் அளித்தவுடன், தங்கள் தொழிற்சாலைகளை பதிவு செய்திட நடவடிக்கை எடுக்க இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

    தவறும்பட்சத்தில், மாவட்ட நிர்வாகத்தால் மேற்படி தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டிக்க, மின் வாரியத்தின் மூலம் விதிகளின் படி மேல்நடவடிக்கை தொடரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
    • விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக மாவட்ட அளவிலான எருது விடும் விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு எருது விடும் விழா நடத்த சம்பந்தப்பட்ட விழா குழுவினர்கள், ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இடம் மற்றும் நாள் குறிப்பிட்டு உரிய விவரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அரசிதழில் பதிவு செய்யப்பட்டதற்கான கிராமங்களின் விவரங்கள் அடங்கிய அரசாணை நகல் இணைக்க வேண்டும்.

    விழாவின் போது நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தாங்களே பொறுப்பு என ரூ.50-க்கான உறுதிமொழி பத்திரத்தில் விழா குழுவினர் வழங்க வேண்டும். காப்பீடு செய்யப்பட்டுள்ளதான ஆவணம் சமர்பிக்க வேண்டும். விழாவில், அனுமதிக்கப்பட்டுள்ள காளைகளின் எண்ணிக்கை தொடர்பான உத்தேசபட்டியல் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கான அரசாணை நகல் இணைக்க வேண்டும்.

    எருது விழா அரங்கத்தின் மாதிரி வரைப்படம் இணைக்க வேண்டும். விழா அரங்கத்தின் நீளம் 200 மீட்டர் இருக்க வேண்டும். எருதுகள் ஓடும் தளம் 125 மீட்டர் இருக்க வேண்டும். காளைகளின் உரிமையாளர்கள் காளைகளுக்கான உடற்தகுதி சான்று பெற வேண்டும்.

    அவ்வாறு சான்று பெற்ற காளைகள் மட்டுமே எருது விடும் விழாவில் அனுமதி வழங்கப்படும். எருது விடும் விழா நிகழ்ச்சிகளில் ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதி வழங்கப்படும். 2 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று இணைக்க வேண்டும்.

    தமிழக அரசினால் வெளியிடப்படும் கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி பார்வையாளர்கள் திறந்தவெளி அரங்கின் அளவிற்கேற்ற சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். காளைகள் ஓடும் பகுதியில் 8 அடி உயர இரட்டை தடுப்பு அரண்கள் அமைக்க வேண்டும். காளைகளை துன்புறுத்த கூடாது.

    எனவே, எருது விடும் விழா நிகழ்ச்சியில் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி கலெக்டர்கள் சரண்யா, சதீஷ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் தாசில்தார்கள், எருது விடும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.
    • உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களை உபயோகிக்கக் கூடாது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையில், இனிப்பு மற்றும் காரப் பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப் பாளர்கள் மற்றும் விற்பனை யாளர்களும், உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று, பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களை உபயோகிக்கக் கூடாது.

    ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு, விவரச்சீட்டு இடும் பொழுது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் விற்பனை செய்ய வேண்டும்.

    பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப் பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது, உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இது குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் நியமன அலுவலரிடம் தெரிவிக்கலாம். மேலும், உணவு பாதுகாப்பு துறையின் 9444042322 என்ற எண்ணிலும், மாவட்ட கலெக்டர் அலுவலக 1077 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    ×