என் மலர்
நீங்கள் தேடியது "அரசு மருத்துவமனை மூடல்"
- மேற்கூரை இடிந்து விழுந்து சேதமானதால் நடவடிக்கை
- புதிதாக கட்டப்படும் என அதிகாரிகள் தகவல்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் 4 மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மகப்பேறு உள் நோயாளி வெளி நோயாளிகள் என தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பழமை வாய்ந்த கட்டிடத்தில் அவசர சிகிச்சை பிரிவு, ஆண், பெண், குழந்தைகள் பிரிவு, முதலமைச்சர் காப்பீடு பிரிவு இயங்கி வந்தது.
இதில் குழந்தைகள் பிரிவு கடந்த 2 மாதங்களுக்கு முன் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமானது. இதனால் பொதுப்பணித்துறை ஆய்வு செய்து இந்த கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது உள்ளது இந்த கட்டிடம் உறுதிதன்மை இல்லை என்பதால் மருத்துவமனை கட்டிடம் மூடப்பட்டது இந்த பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






