என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ சேவையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்"

    • மருத்துவமனையில் மருத்துவ சேவை தொடங்கி வைக்கும் விழா நடந்தது.
    • அமைச்சர் காந்தி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவை தொடங்கி வைக்கும் விழா நடந்தது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செல்லக்குமார், எம்எல்ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி முதல்வர் டாக்டர்.திருவாசமணி வரவேற்புரையாற்றினார். மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர்.நாராயணபாபு திட்ட விளக்கவுரையாற்றினார்.

    பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இவ்விழாவில், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 800 முதல் 1000 நோயாளிகள் மருத்துவ சேவையை பயன்படுத்தி வந்தனர்.

    15 மாதங்களில், இங்கு மேம்படுத்தப்பட்டுள்ள மருத்துவக் கட்டமைப்புகளால் தற்போது ஒரு நாளைக்கு 1,800 புறநோயாளாளிகள் மருத்துவ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் 6 மாதங்களில், மருத்துவ சேவை பெறும் புறநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    மேலும், மாநில எல்லையோரம் அமைந்துள்ள, இம்மாவட்டத்தில் இருந்து சிகிச்சைக்காக, கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று வரும் நிலை விரைவில் மாறும். வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் மருத்துவ தேவைக்காக தமிழகத்திற்கு அதிகளவில் வருகின்றனர்.

    ஒசூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரூ.100 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட மக்கள் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் 92 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி சுகவனம், முன்னாள் எம்எல்ஏ முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பேரூர் தலைவர் தம்பிதுரை, பிடிஏ தலைவர் நவாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி பேராசிரியர் மருத்துவர் சங்கீதா நன்றி கூறினார்.

    ×