என் மலர்
நீங்கள் தேடியது "புரட்டாசி கடைசி சனிக்கிழமை"
- புரட்டாசி மாதம் கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கியது.
- பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கும் பக்தர்கள் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கியது.
நேற்று புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதன்படி, கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள பெருமாள் சன்னதி, கனவாய்ப்பட்டி வெங்கட்ரமண சாமி கோயில், பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோயில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோயில், பாலேகுளி அனுமந்தராயர் கோயில், கிருஷ்ணகிரி மலையப்ப சீனிவாச பெருமாள் கோயில், கிருஷ்ணகிரி தம்மண்ண நகர் வெங்கடேச பெருமாள் கோயில், கிருஷ்ணா கோயில் தெரு நவநீத வேணுகோபால சாமி கோயில், பாப்பாரப்பட்டி பெருமாள் கோயில் உள்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில் ஏரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். நேற்று கடைசி புரட்டாசி சனி என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.






