என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைவாய்ப்பற்ற இளைஞருக்கு டீக்கடை"

    • பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமாரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
    • டீ கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விற்பனையை தொடங்கி வைத்தார்

    காவேரிபட்டனம், 

    காவேரிப்பட்டணம் அரசமர தெருவை சார்ந்த பிரகாஷ் தானும் தன் குடும்பமும் ஏழ்மை நிலையில் உள்ளது. எனவே எனக்கு ஒரு டீக்கடை அமைத்து கொடுத்தால் அதை வைத்து நான் என் குடும்பத்தை நடத்திக் கொள்வேன் என காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமாரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    அதனை ஏற்று காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் காவேரிப்பட்டணம் விஸ்வகர்மா கல்யாண மண்டபத்தில் ஒரு கடையை தன் சொந்த பணத்தில் இருந்து அட்வான்ஸ் கொடுத்து பிரகாசுக்கு டீ கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விற்பனையை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் கோகுல்ராஜ், நித்யா முத்துக்குமார், தமிழ்செல்வி சோபன்பாபு, மற்றும் சிவப்பிரகாசம் மாருதி முருகன், மற்றும் பலர் கலந்து கொடுத்தனர் .இது குறித்து பிரகாஷ் கூறுகையில் நான் வறுமையின் காரணமாக குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருந்தேன். இது குறித்து காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமாரிடம் முறையிட்டேன். உடனடியாக அவர் எனக்கு டீக்கடை அமைத்துக் கொடுத்ததற்கு அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

    ×