என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 மாத குழந்தை திடீர் சாவு"

    • மறுநாள் கழித்து பார்த்த போது குழந்தை பேச்சு மூச்சு இன்றி காணப்பட்டது.
    • பதறி போன தாய் உடனே அருகில் உள்ள தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தேர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முனுபர் (வயது26). இவரது மனைவிக்கு ஆயிஷா என்கிற 2 மாத கைக்குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று பால் குடித்து விட்டு குழந்தையை படுக்க வைத்தனர். பின்னர் மறுநாள் கழித்து பார்த்த போது குழந்தை பேச்சு மூச்சு இன்றி காணப்பட்டது.

    இதனால் பதறி போன தாய் உடனே அருகில் உள்ள தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் தாய் தனது குழந்தை உடலை பார்த்து கதறி அழுதார்.

    இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×