என் மலர்
நீங்கள் தேடியது "போக்குவரத்து போலீசார் ரோந்து"
- பைக்கில் வந்தவர்களை தடுத்ததால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி டவுன் மார்க்கெட் ரோடு புதிய பஸ்நிலையம் பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கூட்ட நெரிசலை சீர் செய்வது வழக்கமாகும்.
இந்நிலையில் ஆரணி காந்தி ரோட்டில் நேற்று போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையில் போக்குவரத்து போலீசார் ரோந்து பணி ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத ஒரே ஸ்கூட்டரில் 3 பேர் மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்களை செல்வகுமார் தடுத்து நிறுத்தினார்.
போலீசாரை கண்டதும் ைபக்கில் வந்தவர்கள் தப்பிக்க முயன்றனர்.
அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த நபரின் சட்டையை செல்வகுமார் இழுத்துள்ளார் இருப்பினும் பைக்கில் வந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
இச்சம்பவம் குறித்து அங்குள்ள சிசிடி கேமரா காட்சியை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






