என் மலர்
நீங்கள் தேடியது "பிரகதீஸ்வரர் கோவில் கிரிவல பெருவிழா"
- பிரகதீஸ்வரர் கோவில் கிரிவல பெருவிழா நடைபெற்றது
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு ஸ்ரீ பிரகன்நாயகி சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் ேகாவில் கிரிவல பெருவிழா நடைபெற்றது. கிரிவல பெருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 3 மணிக்கு அருள்மிகு ஸ்ரீகணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் மாலை 4:30 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ பிரகதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது, மற்றும் மாலை 5:30 மணிக்கு பெளர்ணமி கிரிவலம் துவங்கி நடைபெற்றது. கிரிவலம் கோவிலில் துவங்கி வன்னியர்குழி, கணக்க வினாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது கோவிலில் 7 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.கிரிவல பெருவிழாவில் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழாவிற்கான ஏற்பாடுகளை மாமன்னன் இராசேந்திரசோழன் இளைஞர் அணியினர் விழா கமிட்டியினர் செய்து வந்தனர்.






