என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டன"

    • நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூரில் பென்ஸ் பார்க் ஓட்டல் அரங்கில் அகில இந்திய ரேடியாலஜி சங்க தேசிய மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவ சங்க மாநில முன்னாள் துணைத் தலைவரும் வேலூர் சிஎம்சி ஐடாஸ் கட்டர் கிளைச் செயலாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    வேலூர் சுதந்திரப் போராட்டம் நினைவாக சங்க அமைப்பாளர்களுக்கு போர்வாள் கேடயம் இக்ராம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநாடு பொறுப்பாளர்கள், சிஎம்சி ரேடியாலஜி பேராசிரியர்கள் டாக்டர்கள் ஷாம்குமார், ஸ்ரீதர், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் அமர்நாத், என்.டி.ஆர். பல்கலைக்கழக டாக்டர் சிக்கந்தர், கடலூர் மருத்துவக் கல்லூரி டாக்டர் நடராஜன், வேலூர் டாக்டர் அபர்ணா, டாக்டர் ரேகா செரியன், டாக்டர் அன்பரசன் உள்ளிட்டோருக்கு வால் மற்றும் கேடயம் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மாநாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டன. முடிவில் டாக்டர் அபர்ணா நன்றி கூறினார்.

    ×