என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளி திருட்டு"

    • கதவின் பூட்டு உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள செ.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65) விவசாயி. இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூருக்கு சென்றார்.

    நேற்று காலை வீட்டுக்கு வந்த போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தேவராஜ் தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×