என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்கள் இயங்காததால் அவதி"

    • படிக்கட்டு, மேற்கூைரயில் பயணம் செய்யும் அவலம்
    • கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசி மற்றும் அதன் சுற்றியுள்ள 120-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து தினசரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக வந்தவாசி நகர்புற பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது.

    தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் குறைந்த அரசு பஸ்கள் இயக்கப்படுகின்ற காரணத்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இட நெருக்கடி காரணமாக பஸ் படிக்கட்டில் தொங்கி தங்கள் பயணங்களை மேற்கொண்டு வருகின்ற அவலம் ஏற்படுகிறது. மேலும் சில பயணகிகள் பஸ்சின் மேற்கூரையில் பயணிக்கின்றனர்.

    மாலை பள்ளி கல்லூரி விடுகின்ற நேரத்தில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்ய வேண்டி உள்ளது.

    உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தவாசி சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு அதிகப்படியான வழித்தடங்களை குறிப்பிட்ட தடங்களில் இயக்கினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    மேலும் வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமபுற பகுதிகளுக்கு பல்வேறு வழித்தடங்களான வந்தவாசியிலிருந்து -பெரணமல்லூர், வந்தவாசியிலிருந்து -நெல்லூர், வந்தவாசியிலிருந்து - குறிப்பேடு, ஆகிய பகுதிகளுக்கு போதுமான பஸ் வசதியில்லாததினால்அந்த கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய வயதானவர்கள் பஸ்களை நாடி சிரமப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

    எனவே அரசு சில குறிப்பிட்ட கிராமபுற வழித்தடங்களை ஆய்வு செய்து முறையாக வழித்தடங்களை அதிகப்படுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×