என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவணங்கள் திருட்டு"

    • ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் உள்ள பட்டு நூல் சத்திரம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது.
    • அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை திருட்டு போனதாக வருவாய் ஆய்வாளர் மோகனா ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் உள்ள பட்டு நூல் சத்திரம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக மோகனா பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி மாலை வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை பின்பக்க கதவின் பூட்டை உடைத்து அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை திருட்டு போனதாக வருவாய் ஆய்வாளர் மோகனா ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×