என் மலர்
நீங்கள் தேடியது "உங்கள் வாழ்வை மாற்றக்கூடிய ஆயுதம்"
- பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விளக்கம்
- 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
அரக்கோணம்:
தனியார் துண்டு நிறுவனம் சார்பாக பழங்குடி இன பெண்களுக்கான நிலம், வீடு மற்றும் வாழ்வாதாரம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் அரக்கோணம் டவுன் ஹால் மண்டபத்தில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு இயக்குனர் சாமுவேல் பீட்டர் தலைமை தாங்கினார். அன்னை தெேரசா கிராம வளர்ச்சி நிறுவன செயலர் ஐ.டி.தேவ ஆசிர்வாதம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் பங்கேற்று அரசு திட்டங்கள் குறித்து பேசினார். எந்த நேரத்திலும் உங்களுக்காக நான் பணி செய்ய காத்திருக்கிறேன்
கல்வி மட்டுமே உங்கள் வாழ்வை மாற்றக்கூடிய ஆயுதம் அதை உணர்ந்துகொண்டு பிள்ளைகளைப் படிக்க வையுங்கள் என்றார்.
நிகழ்ச்சியில் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் வரலட்சுமி கிளாரா ஆகியோர் பங்கேற்று பெண்கள் குழந்தைகள் கொத்ததடிமை முறை குழந்தை திருமணம் குடும்ப வன்முறை போன்ற பாதுகாப்பு நலன் குறித்து பேசினார்கள். அரசு மருத்துவர் ஷோபனா பங்கேற்று பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விளக்கி பேசினார்.
நிகழ்ச்சிக்கு பேராசியர் முனைவர் கலைநேசன் வீரகுமார் ஆதி திராவிட நலக்குழு உறுப்பினர் கவுதம் தாட்கோ சமூக பாதுகாப்பு சாசி.சந்தர் ஆனைப்பாக்கம் அம்பிரிஷிபுரம் அரிகலபாடி ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்களும் கலைமணி தமிழ்வாணன், ஜெயராஜ், சாம்ராஜ் பால்ராஜ், அருண்பிரசாத் குணசேகரன் முருகேசன் மங்லாபுரம் வில்லியம்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். அரக்கோணம் சுற்றியுள்ள 500-க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் பங்கேற்றனர்.
நிழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவன செய்திருந்தார்.






