என் மலர்
நீங்கள் தேடியது "சட்டவிரோதமாக மதுவிற்ற பெண் கைது"
- போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து சென்ற போது சின்னதாய் (வயது55) என்ற பெண் சட்டவிரோதமாக மதுவிற்றது தெரியவந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு மதுவிற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து சென்ற போது சின்னதாய் (வயது55) என்ற பெண் சட்டவிரோதமாக மதுவிற்றது தெரியவந்தது. உடனே அந்த பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கைதான அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.






