என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்."

    • 5 டன் சிக்கியது
    • டிரைவர் கைது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூசாரி வலசை கிராமம் அருகே கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் அருண் காந்தி, ராஜமாணிக்கம் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பரதராமி நோக்கி வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் சிறுசிறு மூட்டைகளாக 5 டன் ரேசன் அரிசி இருந்ததும் ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி ரேசன் அரிசியை பறிமுதல் செய்து மினி லாரி டிரைவரை கைது செய்தனர்.

    ×