என் மலர்
நீங்கள் தேடியது "கருத்து வேறுபாடு காரணம்"
- கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை கீழ்படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோகன் (32). பொக்லைன்எந்திர டிரைவர்.இவருக்கும் கச்சாலநாயக்கர் தெருவை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த நிலையில் 5ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஏற்பட்ட சண்டையில் கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி தனது தாய் வீட்டிற்கு வந்தார்.
பல மாதங்களுக்கு பின்பு தனது மனைவி விஜயலட்சுமியை மீண்டும் சேர்ந்து வாழ அழைப்பதற்காக, அசோகன் விஜயலட்சுமியின் வீட்டிற்கு நேற்று சென்றார்.அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சண்டையில் விஜயலட்சுமியின் தம்பி மணிகண்டன் (எ) விஜயகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் நேற்று இரவு வாலாஜா அய்யப்பன் கோவில் அருகே அசோகன் சென்ற போது விஜயலட்சுமியின் தம்பி மணிகண்டன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அக்காவின் கணவரான அசோகனை, சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அசோகனை மீட்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து வாலாஜாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






