என் மலர்
நீங்கள் தேடியது "அந்த வழியாக செல்பவர்கள் நிறுத்தி புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்."
- விவசாயிகள் மகிழ்ச்சி
- தண்ணீர் வெளியேறுவது பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மகேந்திரவாடி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரம்மாண்டமான ஏரி நிரம்பி தண்ணீர் வெளியே றுகிறது. கண்களுக்கு குளிர்ச்சியாக விருந்த ளிக்கிறது.
காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து செல்லும் நீர் மகேந்திர வாடி ஏரிக்கு செல்வதால் ஏரி முழுவதும் நிரம்பி கடல் போல காட்சி அளிக்கிறது.
முழு கொள்ளளவை எட்டிய மகேந்திரவாடி ஏரியிலிருந்து கடை வாசல் வழியாக நீர் நிரம்பி வழிந்து ஓடுகிறது
இந்த காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் நிறுத்தி புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்நிலையில் இந்த மகேந்திரவாடி ஏரி அருகே கரையில் மதகு காத்த அம்மன் கோவில் அமைந்துள்ளது. மற்றொரு சிறப்பம்சமாகும்.
கோவிலின் அருகிலேயே கடை வாசல் பகுதி தண்ணீர் வெளியேறுவது பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. மேலும் விவசாயத்திற்கு தேவையான நீர் நிரம்பி உள்ளதால் அப்பகுதியில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






