என் மலர்
நீங்கள் தேடியது "அனைவரும் இங்கு தான் ஏறி செல்ல வேண்டும்."
- வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன
- விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ந்து வரும் முக்கிய நகரில் போளூர் ஒன்று போளூரில் மேம்பால பணி நடைபெறுவதால் திருவண்ணாமலை வேலூர் செல்லும் அனைத்து பஸ்களும் தீயணைப்பு நிலையம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
அப்போது நெருக்கடி நிலை ஏற்படுகின்றது. தீயணைப்பு நிலையம் அருகே அனைத்து அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன.
கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும், அனைவரும் இங்கு தான் ஏறி செல்ல வேண்டும். ஆனால் பஸ்கள் சில நேரங்களில் நிற்காமல் செல்கின்றன. வேகமாகவும் செல்கின்றன. விபத்துக்கள் ஏற்படும் வகையில் அச்சத்தை ஏற்படுகின்றன.
அதற்காக தீயணைப்பு நிலையம் அருகே ஒரு வேகத்தடை அமைந்தால் மக்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை ஆகியோர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






