என் மலர்
நீங்கள் தேடியது "தீக்காயங்களுடன் கோட்டை அகழியில் குதித்தார்."
- கோட்டை அகழியில் குதித்ததால் பரபரப்பு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40) இவர் வேலூர் முள்ளிபாளையம் ராமகிருஷ்ணா தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். துணி வியாபாரம் செய்வதாக அந்த பகுதியில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திலகவதி (32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் திலகவதி ரமேஷ் தங்கி இருந்த வீட்டுக்கு வந்தார்.
சிறிது நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது வீட்டுக்குள் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டது. அங்கிருந்த பொதுமக்கள் சத்தம் கேட்டு ஓடிச் சென்றனர்.
அப்போது திலகவதி உடலில் தீபற்றி எரிந்தது மேலும் ரமேஷ் உடலிலும் தீ பற்றியது இதனை கண்ட பொதுமக்கள் தீயை அணைத்தனர். தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் ரமேஷ் அங்கிருந்து முள்ளி பாளையம் சாலைக்கு ஓடி வந்தார்.
அங்கிருந்து ஆட்டோவில் அவர் கோட்டை அகழிக்கரைக்கு வந்தார். பின்னர் அவர் தீக்காயங்களுடன் கோட்டை அகழியில் குதித்தார்.
இதனை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டனர். மேலும் இது குறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திலகவதி மற்றும் ரமேஷை மீட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திலகவதியின் உடலில் 90 சதவீதத்திற்கும் மேல் தீக்காயங்கள் உள்ளன.
அவர்களது உடலில் எப்படி தீ பற்றியது என்பது தெரியவில்லை. தற்கொலை செய்ய முயன்றார்களா? அல்லது வேறு ஏதாவது நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ரமேஷ் திலகவதியிடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இருவரும் பேசக்கூடிய நிலையில் இல்லை. இதனால் என்ன நடந்தது என்பது தெரியவில்லை இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வேலூரில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






