என் மலர்
நீங்கள் தேடியது "சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நோயாளி திடீர் மாயம்"
- சிகிச்சை பெற்று வந்த ராமசாமி கடந்த 13-ந்தேதியன்று மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
- அதன்பிறகு அவர் மருத்துவ மனைக்கு திரும்பவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள பாலேபள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 25).
இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமசாமி கடந்த 13-ந்தேதியன்று மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் மருத்துவ மனைக்கு திரும்பவில்லை.
இது குறித்து ராமசாமியின் உறவினர் ராதா என்பவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் தந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு செய்து மாயமான ராமசாமியை தேடி வருகின்றனர்.






