என் மலர்
நீங்கள் தேடியது "சூதாடிய 3 பேர் சிக்கினர்"
- போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
- சிவகுமார் (வயது 38), குமார் (42), கோவிந்தராஜ் (34) ஆகிய அந்த 3 பேரும் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள கொத்தக்கொட்டை பகுதியில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் சிவகுமார் (வயது 38), குமார் (42), கோவிந்தராஜ் (34) ஆகிய அந்த 3 பேரும் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






