என் மலர்
நீங்கள் தேடியது "மாபெரும் மக்கள் இயக்கப் பணியை மேற்கொள்ள வேண்டும்"
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- மயானத்தில் வளர்ந்த புதர்கள் அகற்றம்
ஆற்காடு:
ஆற்காட்டில் தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில்விடு முறை நாட்களில் தூய்மை பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது.
மாநகரங்களில் தூய் மைக்கான மாபெரும் மக்கள் இயக்கப் பணியை மேற்கொள்ள வேண்டும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் அரசு விடுமுறை நாட்களில் மாதம் ஒரு நகரம், மாநகரங்களில் தமிழகமுழுவதும் 10,000 சாலை பணியாளர்கள் தீவிர தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல் ராணிப் பேட்டை மாவட்டம், ஆற்காடு செய்யாறு பைபாஸ் சாலை பாலாற்றங்கரை யில் உள்ள மயானத்தினை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு சாலை பணியாளர்கள் சங்க மாநில தலை வர் சண்முகராஜா தலைமை தாங்கினார்.
மாநிலத் துணைபொதுச் செயலாளர் பெருமாள் வரவேற்றார். மாநில துணைத்தலைவர்கள் ஏழுமலை, பாண்டுரங் கன், மாநில செயலாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்துகொண்டு தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்து பார்வை யிட்டனர்.
இதில் ஆற்காடு நகராட்சி தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கணேசன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை உதவி
கோட்ட பொறியாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து ஆற்காடு உட்கோட்ட நிர்வாகிகள் பன்னீர்செல்வம், கோவிந்தராஜூலு, சரவணன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட
சாலை பணியாளர்கள் அங்குள்ள புதர் மண்டி கிடந்த மயானத்தை தூய் மைப்படுத்தி செடி, கொடிகளை அகற்றி அப்புறப்ப டுத்தினார்கள்.
இதேபோல் அரசு விடுமுறை நாட்களில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மேற்கண்ட தூய்மைப் பணிகள் நடைபெறும் என சாலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.






