என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிடங்கள் திறப்பு விழா"

    • சுகாதார நல மையக் கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
    • மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே பேரண்டபள்ளி துணை சுகாதார நிலையத்தில், பேரண்டபள்ளி, அத்திமுகம், தடிக்கல், கோட்டை உளிமங்கலம், தளி, வி.மாதேப்பள்ளி ஆகிய 6 பகுதிகளில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார நிலையம், செவிலியர் குடியிருப்பு மற்றும் சுகாதார நல மையக் கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.

    கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலை உரையாற்றினார். கிருஷ்ண கிரி எம்.பி. டாக்டர் செல்லகுமார், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்து விழாவில் பேசினர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    தொடர்ந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மேலும் இந்நிகழ்ச்சியில், பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், மருத்துவத்துறை துணை இயக்குனர் செல்வ விநாயகம், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சிவகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் பி.எஸ்.சீனிவாசன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி. முருகன், செங்குட்டுவன், முன்னாள் எம்.பி. சுகவனம் மற்றும் துறை அலுவலர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட சுகாதார பிரிவு உதவி இயக்குனர் கோவிந்தன் வரவேற்றார்.

    முடிவில் சூளகிரி வட்டார மருத்துவ அலுவ லர் வெண்ணிலா நன்றி கூறினார்.

    ×