என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் மோதி தொழிலாளி சாவு"

    • திருமண கோஷ்டியினர் வந்த கார் பிரபு மீது மோதியது.
    • இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மத்தூர்

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பிரபு (வயது 24). எண்ணெய் ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனது மோட்டார்சைக்கிளில் பெரியதலப்பாடியிலிருந்து சிங்காரப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து திருமண கோஷ்டியினர் வந்த கார் பிரபு மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பிரபு படுகாயம் அடைந்தார்.அவரை தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×