என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சு பேட்டி"

    • அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி நடத்த ஏற்பாடு
    • கலெக்டர் அறிவிப்பு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி வருகிற 15 - ந் தேதி ( வியாழக்கிழமை ) அன் றும், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி 17 - ந் தேதி ( சனிக்கிழமை ) அன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு தனித்தனியாக பேச்சு போட் டிகள் வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் நடைபெற உள்ளது .

    6 முதல் பிளஸ் -2 வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ' தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், மாணவர்க்கு அண்ணா,

    அண்ணாவின் மேடைத் தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம்' ஆகிய தலைப்புகளிலும் , கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு ' பேரறிஞர் அண்ணாவும் தமி ழக மறுமலர்ச்சியும் , பேரறி ஞர் அண்ணாவின் சமுதாய சிந்தனைகள், அண்ணாவின் தமிழ்வளம் , அண்ணாவின் அடிச்சுவட்டில் , தம்பி மக்க ளிடம் செல்' ஆகிய தலைப்பு களில் அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள் நடக்கின்றன.

    மாணவர்களுக்கு சிறப்பு பரிசு

    இதேபோன்று பள்ளி மாண வர்களுக்கு ' தொண்டு செய்து பழுத்த பழம் , தந்தை பெரியா ரும் தமிழ் சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்த னைகள் , தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரி யாரும் பெண் விடுதலையும், தந்தை பெரியாரும் மூடநம் பிக்கை ஒழிப்பும் , பெண் ஏன் அடிமையானாள்?, இனிவ ரும் உலகம், சமுதாய விஞ் ஞானி பெரியார் , உலக சிந்த னையாளர்களும் பெரியாரும்' என்ற தலைப்புகளில் தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.

    போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாண விகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில் கலந்து கொள் ளும் மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ் வொருவருக்கும் சிறப்பு பரி சுத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    ×