என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெப்பம் விட்டு மகிழ்ந்த விவசாயிகள்"

    • பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு நேற்று முன்தினம் வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    • 5 ஆண்டிற்கு பிறகு ஏரி நிரம்பி கிருஷ்ணகிரி ஒன்றியம் பாப்பாரப்பட்டி ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், ஊர் பொதுமக்கள் நேற்று காலை ஆடுகளை வெட்டி, சிறப்பு பூஜைகள் செய்து, ஏரியில் தெப்பம் விட்டு மகிழ்ந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் உள்ள படேதலாவ் ஏரிக்கு மார்க்கண்டேயன் நதியில் இருந்து கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் 5ஆண்டிற்கு பிறகு ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும் பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு நேற்று முன்தினம் வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், 5 ஆண்டிற்கு பிறகு ஏரி நிரம்பி கிருஷ்ணகிரி ஒன்றியம் பாப்பாரப்பட்டி ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், ஊர் பொதுமக்கள் நேற்று காலை ஆடுகளை வெட்டி, சிறப்பு பூஜைகள் செய்து, ஏரியில் தெப்பம் விட்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி எம்எல்ஏ., கே.அசோக்குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி, முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், பஞ்சாயத்து தலைவர் மஞ்சுளா வெங்கடேசன், துணைத் தலைவர் நாராயணகுமார், கிளை செயலாளர் முத்து, கந்தன் உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று அதிக அளவில் தண்ணீர் வெளியேறியதால், ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஏரியில் குளித்தும், மீன்களை பிடித்தும் மகிழ்ந்தனர்.

    ×